ஜோன்ஸ்டனின் முடியை தொடக் கூட முடியாது!

அமைச்சர் ஜோன்ஸ்டனின் தலைமுடியை தொடுவதற்கு கூட எவரையும் அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர், சவால் விடுத்துள்ளார்.
    
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குருநாகலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்திய அவர், ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அல்லது யாரையும் குருநாகலிலுள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்துக்கு வருமாறு சவால் விடுகிறோம் என்றும் தெரிவித்தார்.

இரண்டு அழைப்புகளை மாத்திரமே எடுத்தாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு ஆதரவாக பலர் ஒன்று கூடியதாகவும் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இதனிடையே. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டினை நள்ளிரவில் பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!