அலரி மாளிகை மீண்டும் முற்றுகை!

அலரி மாளிகையை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பெரும் திரளான மக்கள் விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
    
கைகளில் தேசியக் கொடிகளுடன் வீதி தடை கம்பங்களில் மேல் ஏறி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அலரி மாளிகைக்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அரசுக்கு எதிராகக் கொதிப்படைந்த மக்கள் போடப்பட்டிருந்த இரும்பு வீதி தடைகளைத் தகர்த்து முன்னோக்கி நகர முயற்சித்த போது, அதனை தடுக்கும் வகையில் மேலும் பல பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!