பொலிசாருக்கு சிவப்பு ரோஜா! April 9, 2022 10:06 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசாங்கத்துக்கு எதிராக நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் வீதியை மறித்து இரும்பு கம்பிகளைக் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறி செல்லமுடியாத வகையில், இறுக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கம்பி வேலிக்கு அருகில் சென்ற, பெண்ணொருவர் சிவப்பு நிறத்திலான ரோஜா பூவை, கம்பிவேலிக்கு அப்பால் நின்றிருந்த பொலிஸாரிடம் கொடுத்தார்.பொலிஸார் எவருமே வாங்கவில்லை. எனினும், “வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பிள்ளைகளும் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடலாம், பரவாயில்லை வாங்கிக்கொள்ளுங்கள்” என அப்பெண் கூறினார்.அதன்பின்னர், சீருடையில் இருந்த பொலிஸார் ஒருவர் வாங்கிக்கொண்டார். ரோஜாவை கொடுத்த அப்பெண், திரும்பி வந்துவிட்டார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…