வீரவன்ஸவும் கையெழுத்திட வேண்டும்! April 14, 2022 6:47 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஆட்சியை கவிழ்க்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தானும் ஆட்சியை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.மேலும் இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக கோட்டாபயவும் அவர் சார்ந்த அரசாங்கமும் பௌத்த சிங்கள ஆட்சி என்பதை முன்னிலைப்படுத்தி அதை வைத்து சொந்தம் கொண்டாடி, தனி சிங்கள மக்களின் நலன்களை மட்டுமே கருதி உத்தியோகபூர்வமாக செயற்பட்டு வந்தமை தமிழ் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாகவும் தெரிவித்திருந்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…