மாற்றத்திற்கு இது பொருத்தமான தருணம்! ஜனாதிபதி கோட்டாபய பகிரங்க அறிவிப்பு

மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது பொருத்தமான தருணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் 17 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்திருந்தனர். 
இந்த நிலையில் நியமனத்தை வழங்கிய பின்னர் அமைச்சர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவையை நியமிக்கும்போது அனுபவத்தில் மூத்தவர் என்ற விடயம் குறித்து சிந்திக்கவில்லை.

அமைச்சரவை பொறுப்புகள் வெறுமனே நன்மையான விடயங்கள் மாத்திரமில்லை. அவை பெரும் பொறுப்புணர்வு.

புதிய அமைச்சரவையிடமிருந்து நேர்மையான, திறமையான, களங்கமற்ற அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

அனேகமான அரச நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ளன. அதற்கு தீர்வை காண வேண்டும்.

மக்கள் எதிர்பார்க்கின்ற அமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது பொருத்தமான தருணம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!