தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு அவசியம் – சஜித் April 21, 2022 6:50 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் Qi Zhenhon ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.எதிர்க்கட்சி அலுலவகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், நட்பு ரீதியாக உதவிகளை வழங்குவதற்கு முன்வந்த சீனாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.அத்துடன், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு குறித்தும் இதன்போது நினைவு கூறப்பட்டுள்ளது.இலங்கை தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு மிகவும் அவசியமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சீனத்தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…