கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வாரங்கள் அவகாசம் தேவை: அலி சப்ரி

நாட்டின் கடன் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் குழுவினை நியமிக்க மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை மற்றும் கடன் தொடர்பில் அலோசனை வழங்குவதற்கான குழுக்களை நியமிப்பதற்கு குறைந்தபட்சம 10-15 நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பனவற்றிடமிருந்து எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கிடைக்கப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!