மருந்துகளுக்கான விலை கட்டுபாட்டை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை

நாட்டில் மருந்துகளுக்கு அமுல்படுத்தப்படும் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார  நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளில் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில், நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நவீன் டி சொய்சா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே  இந்த விடயத்தை தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!