21 ஆவது திருத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. புதிய அமைச்சரவை நேற்றுமாவை கூடியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட இதுதொடர்பான யோசனைக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு உப குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.
    
தற்போதைய கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்கள், 20 மற்றும் 19ஆவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டே 21ஆவது திருத்தம் அமையவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!