இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – நாமல் ராஜபக்‌ஷ

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில்  இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொது ஜன பெரமுன  கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஏற்கனவே காணப்படும்  கூட்டணியை நீடிக்கச் செய்யுமாறும் நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறித்த பதிவில் கோரியுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!