போராட்டகாரர்களை படையினரை கொண்டு தாக்க முயற்சி:போராட்டகாரர்களே எதிர்க்க தயாராகுங்கள் May 3, 2022 9:11 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைதியான அகிம்சைவாத மக்களை பாதுகாப்பு தரப்பினரை பயன்படுத்தி தாக்கவும், அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை விரட்டியடிக்கவும் தயார் நிலைகள் காணப்படுவதாக தனக்கு நம்பிக்கையான தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். இதனால், போராட்டகாரர்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை தோற்டிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.போராட்டகாரர்களே, ஒன்றிணையுங்கள். அணித் திரளுங்கள். மக்களின் உரிமைகளை அடக்குமுறையாலும் பொலிஸ் பலத்தாலும் தோற்கடிக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படுங்கள் என சரத் பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கொழும்பு கொள்ளுப்பிட்டி அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் மைனா கோ கம என பெயரிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…