ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு இல்லை!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
   
கொழும்பில் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அர்த்தமற்ற பிரேரணை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!