‘தலையை துண்டித்து பெட்டியில் அனுப்புவோம்’ – உக்ரைன் பெண்களை மிரட்டும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறும் பெண்களுக்கு ரஷ்ய வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மரியுபோல் நகரில் இருந்து உயிர் பயத்தில் வெளியேறும் பெண்களை, அவர்களின் கணவன்களின் தலையை வெட்டி பெட்டியில் அனுப்பி வைப்போம் என ரஷ்ய வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    
மரியுபோல் நகரை ரஷ்ய துருப்புகளிடம் இருந்து காக்க உக்ரைன் வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இவர்களில் சிலரின் மனைவி மற்றும் காதலிகள் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா மன்றத்தின் உதவியுடன் பத்திரமாக வெளியேறி வருகின்றனர்.

ஆனால் அவர்களை ரஷ்ய துருப்புகள் பல்வேறு சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தி நிர்வாண சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், கேவலமாக திட்டி அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் அல்லது காவல்துறையில் பணியாற்றும் ஆண்களின் மனைவி அல்லது துணைகளுக்கு ரஷ்ய துருப்புகளால் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே என இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் பெண்களை அவர்கள் மிரட்டுவதாகவும், கணவன் அல்லது காதலனின் தலையை வெட்டி பெட்டியில் அனுப்பி வைப்போம் என கொக்கரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோதனை என்ற போர்வையில் நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுவு படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இரும்பு தொழிற்சாலையில் எஞ்சியுள்ள வீரர்கள், காயம் பட்டவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!