ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நேற்றிரவு கண்ணீர்ப்புகை பிரயோகம்!

பத்தரமுல்ல டென்சில் கொப்பேகடுவை வீதியில் அமைந்துள்ள முச்சந்தி பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நேற்றிரவு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் அவர்களை அகற்றுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.
    
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருக்கு செல்லாமல் குறித்த பகுதியில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!