வன்முறைகளில் ஒருவர் பலி- 140 பேர் காயம்!

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
   
அதேவேளை, நிட்டம்புவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்த நிலையில், 27 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!