பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் மொட்டு எம்.பி உயிர் மாய்த்தார்!

நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளை மரணமடைந்துள்ளார்.

நிட்டம்புவையில் இன்று பிற்பகல் அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது,அமரகீர்த்தி அத்துகோரளையின் வாகனத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், மூவர் படுகாயமடைந்தனர். அதில் ஒரு வர் ஆபதான நிலையில் இருந்ததாக அறியமுடிகின்றது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தப்பியோடிய அமரகீர்த்தி அத்துகோரளை கட்டடம் ஒன்றில் ஒளிந்திருந்த போது ஆயிரககணக்கான மக்கள் அதனை சுற்றிவளைத்துக் கொண்டனர். இதன் போதே, அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!