இராணுவ பாதுகாப்புடன் அதிகாலையில் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த!

நேற்று மாலை பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
    
அலரி மாளிகையை நேற்று பிற்பகல் சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், மேலதிக இராணுவ, கடற்படை அணிகள் அழைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!