விசாரணையைக் கோருகிறார் சட்ட மா அதிபர்! விசாரணைக்கு உத்தரவிடுகிறார் பொலிஸ் அதிபர்! May 10, 2022 8:16 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்தச் சம்பவங்களைச் சூழ்ந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவசர முன்னுரிமை அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸ் அதிபரை வலியுறுத்தியுள்ளார்.அரசியலமைப்பின் 14வது சரத்தின் அடிப்படையில் பொதுமக்கள், பேச்சு சுதந்திரம், அமைதியான கூட்டம்; மற்றும், சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இவற்றை மதித்து, பாதுகாப்பதும் அரசியலமைப்பில் கடமையாகும்எனினும் இந்த அரசியலமைப்பு விதிகள் நேற்றைய தாக்குதல்களின்போது மீறப்பட்டுள்ளன.அரசியலமைப்புச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டவர்களுக்கு உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.எனவே சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் அதிபரை கேட்டுள்ளார் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…