மே 9ஆம் திகதிக்கு பின்னர் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை!

மே 9 ஆம் திகதிக்கு பின்னர் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று எச்சரித்துள்ளார்

சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் குற்றச்செயல்களுக்கு பொறுப்பானவர்கள்; மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறிச் செயல்படுவதால் பாதுகாப்புப் படையினருக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!