வழமைபோல பாடசாலைகள் இயங்கும்!

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வழமை போன்று பாடசாலைகளை நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
    
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அரச பாடசாலை அதிபர்களுக்கு இதனை அறிவித்துள்ளனர்.
இதன்படி, பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் எடுக்க அரச பாடசாலை அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!