கொழும்பில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் பேரணி! May 19, 2022 6:26 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு – காலிமுகத்திடலில் நேற்று மாலையும் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கோட்டா கோ கம’வில் நேற்றுக் காலையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலில் நேற்று மாலை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றல் நிகழ்வு நடைபெற்றது. One Galle Face Hotel முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாதையுடன் இறந்தவர்களுக்கு நீதி கோரி பேரணியை ஆரம்பித்தனர்.இந்தப் பேரணி காலிமுகத்திடல் போராட்டத்தின் மத்திய இடமான ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நிறைவுபெற்றது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…