கேரளாவை உலுக்கிய இளம்பெண் தற்கொலை வழக்கில் வெளியான அதிரடி தீர்ப்பு!

கேரளாவை உலுக்கிய இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவர் கணவர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த 24 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண்ணிற்கும், கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.
    
அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. அதாவது, கிரண்குமாருக்கு விஸ்மயா குடும்பத்தார் வரதட்சணையாக கொடுத்த கார் அவருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது, மேலும் வரதட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய தங்கமும் சொன்னபடி கொடுக்கப்படாததால் அவர் விஸ்மயாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்த நிலையிலேயே உயிரை மாய்த்து கொண்டார்.

இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என கூறி உள்ளது. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!