கோட்டா கோ கமவுக்கு 50 ஆவது நாள்! – மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு அழைப்பு. May 27, 2022 6:24 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டமொன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தின் ஐம்பதாவது நாளான நாளை, காலை பத்து மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு இணையாக கோட்டா கோ கமவிலும் பண்டாரநாயக்க சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.‘நாட்டுக்காக மெழுகுவர்த்தி ஏந்துவோம்’ என்ற தலைப்பிலான இந்தப் போராட்டத்தில் கோட்டா கோ கமவுக்கு ஆதவரளிக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தருகின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான பதாகைகளுடன் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…