செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்க பணத்தைச் அச்சிடும் அரசாங்கம் – சஜித் தெரிவிப்பு May 28, 2022 9:59 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest செல்வந்தர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட உள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இவ்வாறு பணம் அச்சிடப்படுவது செல்வந்தர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சஜித் தெரிவித்துள்ளார்.கோடீஸ்வரர்கள் பில்லியன், ட்ரில்லியன் கணக்கான ரூபா வரியை செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரி ஏய்ப்புச் செய்துள்ள தொகைக்கு நிகரான பணத்தை அச்சிட்டு மேலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.சில செல்வந்தர்கள் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பனவற்றில் பெருந்தொகை கடன் பெற்றுக்கொண்டு மீளச் செலுத்தவில்லை எனவும், இந்த கடன் தொகைகளை அறவீடு செய்வது கைவிடப்படுமா என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…