பிரித்தானியாவில் இந்திய உணவகம் முன்பு அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் பலி! May 30, 2022 7:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரித்தானியாவில் இந்திய உணவகம் ஒன்றின் முன்பு நடந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், கொலை வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை ஓல்ட்ஹாம் நகர மையத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சந்தேகத்திற்குரிய ஒருவரை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். சுமார் 4.20 மணியளவில் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 40 வயது கடந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.இந்த நிலையில் 30 வயது கடந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் காரணமாகவே கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தொடர்புடைய சம்பவம் குறித்து பொதுமக்கள் பலரை விசாரித்துள்ளதாகவும், மேலதிக தகவல் தெரியவரும் மக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…