வவுனியாவில் 16 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதி!

வவுனியா – கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்றுஇரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதட்டமான நிலை காணப்பட்டது.
    
16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி, தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்தார். நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற அவர் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிஸார், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டதுடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது.

குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறும் காணப்பட்டுள்ளது.

இரவு 11.45 மணியளவில் தடவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்து பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலத்தினை கிணற்றிலிருந்து மேலே எடுத்து வந்தனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலமை காணப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரண விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தமையுடன் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!