கனடாவை அச்சுறுத்தும் வைரஸ்: 2 மில்லியன் பறவைகள் கருணைக்கொலை! June 3, 2022 7:18 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று.இந்த H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று, ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலம் வட அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் கால்நடை மருத்துவ நிபுணரான பேராசிரியர் Stéphane Lair.புதிதாக ஒரு வைரஸ் ஓரிடத்தில் நுழையும்போது, அங்கிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வைரஸுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே, அந்த வைரஸ் மிக பயங்கரமாக பரவும் என்கிறார் அவர்.ஆக, காட்டிலிருக்கும் பறவைகளைத் தொற்றும் அந்த வைரஸ், அந்தப் பறவைகள் மூலம் நாட்டுக்குள்ளிருக்கும் பறவைகளுக்குப் பரவும்.அவை பரவுவதைத் தடுக்க ஒரே வழி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகளைக் கொல்வதுதான்.ஆகவேதான், கனடா முழுவதிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் இரண்டு மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…