வெள்ளிதோறும் வீட்டில் இருந்து வேலை!

அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் திணேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
    
மாதிவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திணேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் 4 நாட்களாக மட்டுப்படுத்தப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!