பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு அபாயம் – 22 பேர் பாதிப்பு….!

பொகவந்தலாவ – கெல்பியன் தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவின் அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 22பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

11 வீடுகளை கொண்ட லயின் குடியிருப்பே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட உத்தியோகத்தர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் 11 சிறுவர்கள் , 06 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!