வீட்டை விட்டு ஓடிப் போன ஜோன்ஸ்டன்! – நீதிமன்றம் பிடியாணை.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.
    
சந்தேகநபர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறும் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் அயேஷா ஜினசேன நீதவானிடம் கோரியிருந்தார்.


இதன்படி, முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!