தொழிற்சங்க நடவடிக்கையால் நாட்டில் மின் விநியோக தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு June 9, 2022 7:52 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயற்பட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுஇலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மின்சார சபையின் பொறியியலாளர் சங்க தலைவர் அனில் இன்டுருவ, செயலாளர் தம்மிக்க விமலரட்ன ஆகியோர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…