மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவையிலும் கலந்து கொள்ளவில்லை – நாமல் ராஜபக்‌ஷ

முன்னாள்  பிரதமர்  மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகியதன்  பின்னர் எந்தவொரு  அமைச்சரவை கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

நேற்று முன்தினம்  நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இதனை  தெரிவித்துள்ளார்.
 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!