இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – போக்குவரத்துக்கு பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இவ்வாறு பணிக்கு சமூகமளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!