மகனின் சடலத்தை வாங்க பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

இந்தியாவில் மகனின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து வாங்க லஞ்சம் கேட்கப்பட்டதால், பணத்துக்காக வயதான ஏழைத் தம்பதி வீடு வீடாக பிச்சை எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய மாநிலம் பீகாரில் சமஸ்திபூரில் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்தேறியுள்ளது. பீகாரின் சமஸ்திபூரின் தெருக்களில் வயதான தம்பதியினர் தங்கள் மகனின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து மீட்டெடுக்க எல்லோரிடமும் பிச்சை எடுத்து வருகின்றனர்.
   
மருத்துவமனை ஊழியர் ஒருவர் தங்கள் மகனின் உடலை ஒப்படைக்க தம்பதியிடம் 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களிடம் பணம் இல்லாததால், தங்கள் ஊரைச் சுற்றி எல்லோரிடமும் பிச்சை கேட்டு சுற்றி வருகின்றனர். அவர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஊடகங்களில் பேசிய மகேஷ் தாக்கூர் (உயிரிழந்தவரின் தந்தை), “சில நாட்களுக்கு முன்பு என் மகன் காணாமல் போய்விட்டான். இப்போது, ​​என் மகனின் உடல் சமஸ்திபூரில் உள்ள சதர் மருத்துவமனையில் இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. என் மகனின் உடலை விடுவிக்க மருத்துவமனை ஊழியர் 50,000 கேட்டுள்ளார். நாங்கள் ஏழைகள், எப்படி? இந்தத் தொகையைச் செலுத்த முடியுமா?” என்று கூறினார்.

மருத்துவமனையில் பணியாற்றும் பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை.
நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து ஊழியர்கள் பணம் பறித்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

“இப்படி ஒரு நிலைமைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டவர்கள், அவர்கள் தப்ப மாட்டார்கள். இது மனித குலத்திற்கு அவமானம்” என்று சமஸ்திபூர் சிவில் சர்ஜன் டாக்டர் எஸ்.கே. சௌத்ரி கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!