புதிய கட்சியை உருவாக்க பொன்சேகா திட்டம்! June 14, 2022 7:13 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பிரதித் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்காக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்களின் மூலம் அறியமுடிகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரிவில் சிரேஷ்ட பதவிகளை வகித்த பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் புதிய கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பயணம் குறித்து, பொன்சேகாவும் அவரது நெருங்கிய பங்காளிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் அறியமுடிகிறது.இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் கட்சியை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…