அரிசி பற்றாக்குறைக்கு சாத்தியம் இல்லை!

பயிரிடப்படாத நிலங்களை அரசாங்கத்தின் வசப்படுத்தி ஐந்து வருடங்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!