ரணிலை சந்தித்த ஹர்ச!

ரணிலும், ஹர்சவும், எரானும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்த தாம் ,இலங்கையின் முன்னேற்றத்திற்காக செயற்பட விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின், ஹர்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் சந்திப்பில் பங்கேற்றனர்.

முன்வைக்கப்படும் திருத்தங்கள்
இதன்போது, நிதியமைச்சின் இக்கட்டான பொருளாதார நிலைமையை பிரதமர் முன்வைத்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தின் மூலம் பல நிதித் திருத்தங்களை முன்கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க, ஆதரவை கோரியுள்ளார்

இந்தநிலையில், தாம் இலங்கையர்களுக்காக பணியாற்றத் தயார் என்று தாம் தெரிவித்தாக ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!