நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கூடாது!

நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் காணப்பட வேண்டும் என்பதுடன், அதனை இல்லாது செய்ய கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    
அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக தேசிய கொள்கைகள் மற்றும் ஆணைக்குழுக்கள் உன்பன அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தமக்கு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவரை 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்வதாக அல்லது மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!