அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வழங்கப்படும் அனுமதி

எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் கல்வித்துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி ஜுன் 20ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் அவர்கள் பணியாற்றக்கூடிய வகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசேட சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிரூபத்திற்கு அமைய அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தவிர்ந்த மற்றைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!