‘அக்னிபாத்’ போராட்ட எதிரொலி: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர். வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர்.
    
இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலவர கும்பல் கல்வீசியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!