ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலக நுழைவாயிலை மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 ஆண்கள், உட்பட நான்கு பெண்கள் மற்றும் பௌத்த பிக்கு ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயில்கள் இரண்டினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

இந்த நிலையில் , ஆர்ப்பாட்டம் காரணமாக முன்னதாக மூடப்பட்டிருந்த கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி வாகன போக்குவரத்துக்காக தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!