வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்! June 21, 2022 7:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரது உடல்களும் ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்து கிடந்தவர்கள் உடல்களை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பொலிசார் தரப்பில் கூறுகையில், அந்த வீட்டில் இருந்து 9 சடலங்களை நாங்கள் கைப்பற்றினோம். மூன்று பேரின் சடலங்கள் ஒரு பகுதியிலும், ஆறு பேரின் சடலங்கள் வீட்டின் மற்றோரு பகுதியிலும் கண்டுபிடித்தோம்.உயிரிழந்தவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே உண்மை தெரிய வரும் என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…