இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் சேவைக்காலம் தொடர்பில் பிரதமர் பரிந்துரை ..!

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தினை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பரிந்துரை செய்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இந்த பரிந்துரையினை முன்வைத்துள்ளார்.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின்  சேவைக் காலத்தினை நீடிக்குமாறு பரிந்துரைசெய்து பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் இறுதியில் பதவியில் இருந்து நீக்கப்படும் திட்டம் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!