ஜெர்மனியில் நீதிமன்ற வாசலில் கிடந்த மனித தலையால் பரபரப்பு!

ஜெர்மனியில் உள்ள பான் என்ற பகுதியில் அமைந்திருக்கும் மாவட்ட கோர்ட் வளாகத்தின் வாசலில், நேற்று வெட்டப்பட்ட மனித தலையை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
    
இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம், வெட்டப்பட்ட தலை கிடந்த பான் கோர்ட் வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலையில் உள்ள ரைன் நதிக்கரையில், தலையில்லாத உடல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!