அரசுக்கு எதிராக போராட்டம்: சஜித் அணி தீர்மானம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுக்கு எதிராக பாரியதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(28) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

போராட்டம்
இதன்போது சமகால அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

இதற்கமைய தற்போதைய அரசை விரட்டுவதற்கு பாரியதொரு வேலைத்திட்டம் அவசியம் எனவும், அதனை உருவாக்க பிரதான கட்சிகளுடன் எதிர்வரும் 6 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்துக்கு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தீர்மானம
எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தாதிருக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!