மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா

நாமல் ராஜபக்சவின் சிறப்பு பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி அளித்தது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மங்கள சமரவீரவின் கருத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விளக்கம் கோரியிருக்கிறோம் என்று ரஷ்ய தூதரக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச ரஷ்யாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றார் என்று அண்மையில் மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!