குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என்பது ஒரு தகவல் மட்டுமே! July 5, 2022 7:09 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதலொன்றோ அல்லது நாசகார செயல்களோ, வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றின் தலையீட்டுடன் இடம்பெறலாம் என்பது ஒரு தகவல் மட்டுமே என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலருக்கு அனுப்பிய கடிதத்தை மையப்படுத்தி இந்த விடயம் தொடர்பில் வீரகேசரி பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் விளக்கம் கோரியது. அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ,‘பொலிஸாருக்கு இவ்வாறான தகவல்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து கிடைக்கும். அவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டிருந்தமையால், அது தொடர்பில் பாதுகாப்புச் செயலருக்கு அறிவிக்கப்பட்டது.அது ஒரு தகவல் மட்டுமே. அந்த தகவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உறுதி செய்து கொள்வதற்காக, அனைத்து உளவுத் துறைகளுக்கும் பகிர்ந்துகொள்வதன் நோக்காக கொண்டு பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட அந்த தகவல் பாதுகாப்பு செயலரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…