இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான தண்டனை: சரத் பொன்சேகா வலியுறுத்து July 7, 2022 10:01 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் உட்பட இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.இதன் மூலம் இராணுவத் தளபதி, இராணுவம் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை சுட்டுவதை தவிர்க்குமாறு காவல்துறை அதிகாரிகளிடமும் இராணுவத்தினரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…