கோட்டாவுக்கும் கூட்டாளிகளுக்கும் சர்வதேச பிடியாணை!

ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட் டாவி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
    
ராஜபக்ச அரசாங்கத்தின் வரி குறைப்பு, விண்ணை முட்டும் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் ஊழல் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
சர்வதேச நாயண நிதியத்துடன், இணைந்து செயற்படவும், பொருளாதா ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட இலங்கைத் தீவில் உள்ள அனைவரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!