தீர்வு தாமதித்தால் நாட்டில் பதற்றம் உக்கிரமடையும்:டளஸ் அழகப்பெரும July 14, 2022 7:24 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கடந்த 9 ஆம் திகதி கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்திற்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.அப்படியில்லை என்றால் நாட்டில் தொடர்ந்தும் பதற்றம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டது.இதனடிப்படையில், புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு வழங்க தாமதிக்கும் அளவுக்கு நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மேலும் உக்கிரமடையும்.அப்போது இலங்கை சட்டம் இல்லாத நாடாக மாறிபோகும் என்பதுடன் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகும் எனவும் டளஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…